• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பன்றிகளை அப்புறப்படுத்த மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

September 17, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளை உரிமையாளர்கள் அப்புறப்படுத்த வேண்டும் என கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது

“கோவை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் நாட்டு பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவைகளால் பொது சுகாதாரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகின்றன. கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பன்றிகள் வளர்ப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

எனவே. பன்றி வளர்ப்பவர்கள் உடனடியாக பொது இடங்களில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும், மற்றும் பொது சுகாதாரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையீல் சுற்றித்திரியும் பன்றிகளை 15 நாட்களுக்குள் அப்புறப்படுத்துமாறு பன்றிகளை வளர்க்கும் உரிமையாளர்களைக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தவறினால் பன்றி உரிமையாளர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க