• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பந்தய சாலையில் பொதுமக்களை கவரும் வகையில் மின்னொளி விளக்குடன் மீடியா டவர் அமைப்பு

February 2, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவின்படி கோவை மாநகராட்சி பந்தய சாலை பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாதிரி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியின் ஒரு பகுதியாக தாமஸ் பார்க் சந்திப்பில் அலங்கார கற்கள் அமைக்கும் பணி நடைபெற்று முடிவற்றது.

அதனைத் தொடர்ந்து சந்திப்பின் மையத்தில் கண் கவர் மின்னொளி விளக்குகளுடன் கூடிய மீடியா டவர் அமைக்கப்பட்டது.

இது குறித்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறுகையில்,

‘‘இந்த மீடியா டவரின் உச்சியில் தெற்கு ஆசியாவில் முதன்முறையாக பொதுமக்களை கவரும் வகையில் சராசரியாக 8.15 மீ சுற்றளவு மற்றும் 1.70 மீட்டர் உயரமுள்ள காணொலி அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த காணொலி அமைப்பில் நேரடி காணொலி மற்றும் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் மொத்த அமைப்பையும் ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து இயக்குமாறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஓரிரு வாரங்களில் முழுவதுமாக பணி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்’’ என்றார்.

மேலும் படிக்க