• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பத்திரப்பதிவு செய்ய புதிய விதிகள் வெளியீடு

May 5, 2017 தண்டோரா குழு

அங்கீகரிக்கப்படாத மனைகளை வரைமுறைப்படுத்துவது தொடர்பாக இரண்டு அரசாணைகளை தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.இந்த புதிய அரசாணையின்படி 20-10.16 முன் பிரிக்கப்பட்ட மனைகளை அங்கீகரிக்க அரசு ஒப்பு கொண்டுள்ளது.

அங்கீகரிக்கப்படாத மனைகளுக்கு சந்தை மதிப்பில் 3% செலுத்தினால் மனைகள் அங்கீகரித்து வரையறுக்கப்படும்.

கட்டணத்தை வரைமுறைப்படுத்த மாநகராட்சிக்கு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.100, நகராட்சிகளில் ரூ. 60, பேரூராட்சி, ஊராட்சிகளுக்கு ரூ. 30 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கட்டணத்தை அரசுக்கு செலுத்தினால் நிலம் வரைமுறைபடுத்தப்படும்.

தொடர்ந்து வேளாண் செய்ய தகுந்த நிலத்தை வீட்டுமனைகளாக மாற்ற அனுமதியில்லை.
உரிமம் இல்லாத காலி நிலங்களை மனையாக பதிவு செய்ய அனுமதியில்லை. விவசாய நிலமாக இருந்தால் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும்.

ஆறு, கால்வாய் உள்ளிட்ட நீர் நிலைகளை மனையாக மாற்ற அனுமதியில்லை.அரசு நிலம், கோயில் நிலங்களை மனைகளாக மாற்ற அனுமதியில்லை.

மேலும் படிக்க