• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் கோவையில் நடைபெற்ற நேரடி கடன் வழங்கும் முகாமில் 40 கோடி ரூபாய் கடன்

March 26, 2022

பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் கோவையில் நடைபெற்ற நேரடி கடன் வழங்கும் முகாமில், பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு சுமார் 40 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளுடன் பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் வழங்கி வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கோவை வட்டாரம் சார்பாக கடன் உதவி வழங்கும் முகாம் ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. வங்கியின் சென்னை மண்டல மேலாளர் பி.மகேந்தர் முகாமில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடன் தொகைக்கான காசோலையை வழங்கினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

எங்களது வங்கி மூலம் பல்வேறு கடன்கள் வழங்கப்படுகிறது. குறிப்பாக, வீட்டு கடன்,தொழில் முனைவர் மற்றும் கல்வி,வாகனம், என அனைத்து துறைகளிலும் கடன் வழங்கி வருவதாகவும்,வங்கியில் பெறும் கடன்களை,பயனாளிகள் தவணை மாறாமல் செலுத்த வேண்டும் என கேட்டு கொண்ட அவர்,அப்போதுதான் தொடர்ந்து வங்கிகள் அதிக கடன்களை வழங்க முடியும் என தெரிவித்தார்.

மேலும் எங்களது வங்கியில் பெற்ற கடனை ஒரே முறையில் திருப்பி செலுத்தும் ஒரு முறை தீர்வு இருப்பதால் இதிலும் கடன் பெற்றவர்கள் கடனை திருப்பி செலுத்தி தீர்வு காண முடியும் என தெரிவித்தார்.இந்த முகாமில் ஒரு முறை தீர்வு பயனாளிகளும் பயன் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

முன்னதாக நடைபெற்ற கடன் உதவு முகாம் துவக்க விழாவில், கோவை வட்டார தலைவர் .இராமநாதன் மற்றும் உதவி பொது மேலாளர்கள் கங்காதர் பிரசாத், சரவணன் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க