• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பக்தர்கள் இன்றி நடைபெற்ற மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் சூரசம்ஹாரம்

November 20, 2020 தண்டோரா குழு

மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் சூரசம்ஹாரம் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் அமைந்து உள்ள ஏழாம் படை வீடு என்று அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி விழா ஞாயிற்றுக்கிழமை அன்று வேள்வி மாதத்துடன் பக்தர்கள் காப்பு கட்டிக்கொண்டு விரதத்தை தொடங்கினர். தொடர்ந்து ஆறாவது நாளான இன்று சூரனை வதம் செய்யும் நிகழ்வானது மருதமலை திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

முன்னதாக அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து சுப்பிரமணிய சுவாமி ஆட்டுக்கிடாய் வாகனத்திலும் , வீரபாகு வெள்ளை குதிரை வாகனத்திலும் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.முன்னதாக ஒரு மணியளவில் பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வர கோவில் நிர்வாகம் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் வெளியூர்களில் இருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இன்று அதிகாலை முதல் மூகூர்த்த நாள் என்பதால் ஏரானமாவரகள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். இருப்பினும் கொரானா எதிரொலிகா அரசு உத்தரவு படி சூரசம்ஹாரம் விழா பக்தர்கள் இன்றி நிறைவடைந்தது. நாளை நடைப்பெற உள்ள திருக்கல்யாணம் பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை எனவும் காலை 10 மணிக்கு மேல் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க