• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பக்கோடாவிற்கு போட்டியாக பாஜக வினர் அல்வா போராட்டம் !

February 12, 2018 தண்டோரா குழு

பிரதமர் மோடியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பகோடா விற்ற புதுவை முதல்வருக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து பாஜவினர் அல்வா கடை திறந்து விற்பனை செய்து போராட்டம் நடத்தினர்.

இளைஞர்கள் பக்கோடா விற்று தினமும் சம்பாதிக்கின்றனர். அதுவும் வேலை வாய்ப்புதானே என பாஜக தலைவர் அமித்ஷா கூறினார். இந்தக் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மத்திய அரசின் முத்ரா யோஜனா திட்டம் மோடி அரசின் ஏமாற்று வேலை எனக் கூறியும் பிரதமர் மோடியைக் கண்டித்து, புதுவை முதல்வர் நாராயணசாமி தலைமையில் புதுச்சேரியில் கடந்த வாரம் பக்கோடா விற்கும் போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் முதல்வர் நாராயணசாமி, இளைஞர் காங்கிரஸார் பட்டம் பெற்ற உடையணிந்து, அடுப்பு மூட்டி பக்கோடா, பஜ்ஜி ஆகியவற்றை சுட்டு மோடி பக்கோடா, பஜ்ஜி எனக் கூவிக் கூவி விற்பனை செய்தனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் நடைபெறும் காங்கிரஸ் ஆட்சியில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தராமலும் பல்வேறு வரி உயர்தப்பட்டுள்ளதையும் கண்டித்து பாஜக சார்பில்  நேரு சாலையில் நாராயணசாமி என்ற பெயரில் அல்வா கடை திறந்து பாஜகவினர் விற்பனை செய்து வருகின்றனர். இதில், புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

மேலும் படிக்க