• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நோய் தொற்று காலங்களில் வீடுகளை சுத்தமாக வைத்துகொள்ள நவீன வகை டர்போ கோவையில் அறிமுகம் !

August 28, 2021 தண்டோரா குழு

நோய் தொற்று காலங்களில் வீடுகளை சுத்தமாக வைத்துகொள்ள ஜெர்மன் தொழில்நுட்பத்தில் உருவாகி உள்ள நவீன வகை டர்போ ஸ்பின் மாப் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில்,முக கவசம் அணிவது மற்றும் கைகளை சுத்தப்படுத்துவது போன்ற விழிப்புணர்வுகள் பொதுமக்களிடையே அதிகரித்து வருகின்றன. அதே நேரத்தில் புதிதாக நோய் தொற்றுகள் பரவாமல் இருக்க வீடுகளையும் சுத்தமாக வைப்பது அத்தியவாசியமாக உள்ளது.

இந்நிலையில் வீடுகளை எளிதாக சுத்தம் செய்ய நவீன வகையிலான காலா டர்போ ஸ்பின் மாப் கோவையில் அதன் விற்பனையை துவக்கி உள்ளது.ஃப்ரூடன் பெர்க் நிறுவனத்தின் தயாரிப்பான இதன் விற்பனை,கோவையில் முதன் முறையாக திருச்சி சாலையில் உள்ள டென்னிஸ் ஹைபர் மார்க்கெட்டில் துவங்கியது.இதற்கான துவக்க நிகழ்ச்சியில் நிறுவனத்தின் மண்டல மேலாளர் நரேஷ் பண்டாரி ,டென்னிஸ் ஹைபர் மார்க்கெட்டின் மேலாளர் ஜோபின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜெர்மன் தொழில் நுட்பத்தில் தயாராகி உள்ள காலா டர்போ ஸ்பின் மாப் குறித்து,ஏரியா மேலாளர் ஜெப்ரே ஜோஸ்வா கூறுகையில்,

99 சதவீத கிருமிகளை அழிக்கும் திறன் இந்த காலா ஸ்பின் மாப் இருப்பதாக கூறிய அவர்,குறிப்பாக வீடுகளை சுத்தம் செய்ய எளிய முறையில் பயன்படுத்தும் வகையில் இந்த மாப் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.நோய் தொற்று காலங்களில் வீடுகளை நவீன முறையில் சுத்தபடுத்துவதற்கான இந்த மாப் கோவை வாழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் படிக்க