• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நேற்று இடைநீக்கம், இன்று தடை நீக்கம் உ.பி. அரசியலில் திடீர் திருப்பம்!

December 31, 2016 தண்டோரா குழு

உத்தரப் பிரதேசத்தில் திடீர் திடீரென்று அரசியல் நிகழ்வுகள் நடக்கின்றன. மாநில முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும் அவரது தந்தையும் சமாஜவாதி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவுக்கும் இடையிலான பனிப்போர் திடீரென்று வெள்ளிக்கிழமை பூதாகரமானது.

மாநிலத் தேர்தலில் சமாஜவாதிக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் பட்டியலை முலாயம் சிங் யாதவ் வெளியிட்டார். அதில், அகிலேஷின் ஆதரவாளர்கள் பெயர் எதுவும் இடம்பெறவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த முதலமைச்சர் அகிலேஷ் போட்டியாக தனது ஆதரவாளர்களான 35 பெயர்களை வேட்பாளர்களாக அறிவித்தார்.

இதையடுத்து, கோபமடைந்த முலாயம் சிங் யாதவ் தனது மகன் அகிலேஷ் யாதவ், கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ் ஆகியோரைக் கட்சியிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கினார்.
இதன் காரணமாக, கட்சியில் பிளவு ஏற்படும் சூழ்நிலை உருவானது.

இந்நிலையில் அகிலேஷ் தனது இல்லத்தில் ஆளும் கட்சி சட்டப் பேரவை உறுப்பினர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அக்கூட்டத்தில் அகிலேஷுக்கு 150 பேர் ஆதரவு தெரிவித்தனர்.

இதனிடையில், அகிலேஷ் மீதான வெளியேற்ற நடவடிக்கையடுத்து, அவரது ஆதரவாளர்களுக்கும் முலாயம் சிங் யாதவ் ஆதரவாளர்களுக்கும் இடையில் உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் மோதல் நடைபெற்றன.

சம்பவம் குறித்து முலாயம் சிங் யாதவுக்கும் தகவல் கிடைத்தது.இதன் பின் விளைவாக, அகிலேஷ் யாதவ், ராம்கோபால் யாதவ் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கிய நடவடிக்கையை முலாயம் சிங் யாதவ் திரும்பப் பெற்றுக் கொண்டார்.இதன் விளைவாக சமாஜவாதி கட்சியில் பிளவு தற்போது தவிர்க்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க