• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் புரஸ்கார் விருது விண்ணப்பிக்க அழைப்பு

September 16, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:

இந்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், உள்துறை அமைச்சகத்தின் சார்பாக ஆண்டுதோறும் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் பிறந்த தினமான ஜனவரி 23 ஆம் நாள் அன்று பேரிடர் மேலாண்மை தொடர்பான பணிகளில் சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ‘நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் புரஸ்கார்’ விருது வழங்கப்படுகிறது.

2023 ஆம் ஆண்டிற்கான விருது பெற தகுதியான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் https://awards.gov.in என்ற இணையதளத்தின் மூலமும் மற்றும் https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் உள்ள இந்த விருது தொடர்பான லிங்க் மூலமும் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் படிக்க