• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நெல்லை கண்ணன் மற்றும் கோலம் போட்டவர்கள் கைது குறித்து முதல்வர் விளக்கம்

January 7, 2020

நெல்லை கண்ணன் மற்றும் கோலம் போட்டவர்கள் கைது குறித்து முதல்வர் பழனிச்சாமி விளக்கமளித்துள்ளார்.

நெல்லை கண்ணன் கைது குறித்து காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ் சட்டசபையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி, எந்த கட்சி தலைவராக இருந்தாலும் அவர்களைப் பற்றி வரம்பு மீறி பேசக் கூடாது. நெல்லை கண்ணன் விவகாரத்தில் சட்ட ரீதியாகவே நடவடிக்கை எடுத்துள்ளோம். நெல்லை கண்ணனை கைது செய்ய வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் அரசுக்கு இல்லை.

கோலம் பாடுபவர்கள் தங்கள் வீட்டு வாசலில் கோலம் போட்டிருந்தால் பிரச்சினை இல்லை. வெறொருவர் வீட்டு வாசலில் கோலமிட்டது குறித்து வீட்டு உரிமையாளர் புகாரளித்ததால் கைது செய்யப்பட்டார் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க