• Download mobile app
02 Jul 2025, WednesdayEdition - 3430
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீதி விசாரணையை அறிவிக்காவிட்டால் அறப்போராட்டம் வெடிக்கும் – ஓ.பன்னீர் செல்வம்

March 4, 2017 தண்டோரா குழு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதி விசாரணையை மார்ச் 8-ம் தேதி மாலைக்குள் தமிழக அரசு அறிவிக்காவிட்டால் அறப்போராட்டம் வெடிக்கும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது; “மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழகத்தில் உள்ள 7 கோடி மக்கள் மனதிலும் சந்தேகம் உள்ளது. அந்த சந்தேகத்தை போக்க வேண்டிய பொறுப்பு ‘நம்மிடம்’(ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள்) உள்ளது.

75 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் அவர் இருந்த போது அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த விவரங்களை மக்கள் அறிய வேண்டும்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிவிசாரணை கோரி மார்ச் 8-ம் தேதி உண்ணாவிரதம் இருக்கிறோம். அன்று மாலை 5 மணிக்குள் தமிழக அரசு நீதிவிசாரனை குறித்து நல்ல முடிவு அறிவிக்காவிட்டால், தமிழகத்தில் அறப்போராட்டம் வெடிக்கும்.

முன்னதாக நான்(ஒ.பன்னீர்செல்வம்)ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் சிகிச்சைகள் தொடர்பான விவரங்களை கேட்டேன். அவர்கள் அளித்த தகவல்கள் என் மனதை சங்கடப்படுத்தின.

அதனால்தான், நீதி விசாரணை வேண்டும் என கேட்டேன். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரை வெளிநாட்டுக்கு கொண்டு செல்லலாம் என கூறினேன். ஆனால் மறுத்துவிட்டார்கள். அ.தி.மு.க. ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கிவிட அனுமதிக்க கூடாது”.

இவ்வாறு ஒ.பன்னீர்செல்வம் கூறினார்.

மேலும் படிக்க