• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

நீதிமன்றம் அருகே நடைபெற்ற கொலை வழக்கில் மேலும் 6 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்

March 15, 2023 தண்டோரா குழு

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு பின்புறமுள்ள இரண்டாவது வீதியில் பேக்கரி முன்பாக கோவை கொண்டையம் பாளையம், லட்சுமி கார்டன் பகுதியைச் சேர்ந்த கோகுல் (25), கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, பந்தயசாலை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செயது புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு, இவ்வடிக்கில் சம்மந்தப்பட்ட 13 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அனைவரும் கோவை மத்திய சிறையில் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான சூர்யா (23), மீன்கடை கார்த்திக் (23), டேனியல் (23), ஆகியோரின் மீது கோவை மாநகர காவல் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவுப்படி ஏற்கனவே குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விக்ரம் (21), சிவிக்சன் பெர்னார்ட் (எ) சின்னு (23), விஷ்ணு பிரகாஷ் (எ) விக்கி (24), பரணி சவுந்தர் (20), ஹரிஹரன் (எ) கெளதம் (24), அருண்குமார் (21) ஆகியோர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவு ஆவணங்கள் கோவை மத்திய சிறையில் உள்ள அவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க