• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீதிமன்றம் அருகே நடைபெற்ற கொலை வழக்கில் மேலும் 6 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்

March 15, 2023 தண்டோரா குழு

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு பின்புறமுள்ள இரண்டாவது வீதியில் பேக்கரி முன்பாக கோவை கொண்டையம் பாளையம், லட்சுமி கார்டன் பகுதியைச் சேர்ந்த கோகுல் (25), கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, பந்தயசாலை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செயது புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு, இவ்வடிக்கில் சம்மந்தப்பட்ட 13 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அனைவரும் கோவை மத்திய சிறையில் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான சூர்யா (23), மீன்கடை கார்த்திக் (23), டேனியல் (23), ஆகியோரின் மீது கோவை மாநகர காவல் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவுப்படி ஏற்கனவே குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விக்ரம் (21), சிவிக்சன் பெர்னார்ட் (எ) சின்னு (23), விஷ்ணு பிரகாஷ் (எ) விக்கி (24), பரணி சவுந்தர் (20), ஹரிஹரன் (எ) கெளதம் (24), அருண்குமார் (21) ஆகியோர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவு ஆவணங்கள் கோவை மத்திய சிறையில் உள்ள அவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க