• Download mobile app
09 May 2025, FridayEdition - 3376
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்

March 31, 2017 தண்டோரா குழு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கோல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய கர்ணன், கோல்கட்டா உயர் நீதிமன்றத்திற்கு கடந்த ஆண்டு மாற்றப்பட்டார். இதனிடையே அவர் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக புகார் கூறி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, இந்திய பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பினார்.

நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்படும் வகையில் அவர் நடந்து கொண்டதாக கூறி நீதிபதி கர்ணன் மீது, உச்ச நீதிமன்றம் தானாகவே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணையில் அவர் ஆஜராக உத்தரவிட்டும் அவர் நேரில் ஆஜராகவில்லை. இதனால், அவருக்கு எதிராக ஜாமினில் வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற அவமதிப்பு வழக்கு விசாரணையில் கோல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அமர்வு முன்பு ஆஜரானார்.

மேலும் படிக்க