• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்

March 31, 2017 தண்டோரா குழு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கோல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய கர்ணன், கோல்கட்டா உயர் நீதிமன்றத்திற்கு கடந்த ஆண்டு மாற்றப்பட்டார். இதனிடையே அவர் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக புகார் கூறி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, இந்திய பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பினார்.

நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்படும் வகையில் அவர் நடந்து கொண்டதாக கூறி நீதிபதி கர்ணன் மீது, உச்ச நீதிமன்றம் தானாகவே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணையில் அவர் ஆஜராக உத்தரவிட்டும் அவர் நேரில் ஆஜராகவில்லை. இதனால், அவருக்கு எதிராக ஜாமினில் வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற அவமதிப்பு வழக்கு விசாரணையில் கோல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அமர்வு முன்பு ஆஜரானார்.

மேலும் படிக்க