• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீட் தேர்வை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

June 15, 2019 தண்டோரா குழு

மேல்நிலை தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும் மருத்துவ கல்வியில் சேர முடியாது என்ற நிலையை நீட் தேர்வு உருவாக்கியுள்ளதாக திராவிடர் கழகம் மற்றும் தோழமை அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.

நீட் தேர்வை கண்டித்தும், மத்திய அரசின் மும்மொழிக்கல்வி முன்வரவை கண்டித்தும் கோவையில் திராவிடர் கழகம் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஆர்பாட்டத்தில் மத்திய அரசின் மும்மொழி கொள்கை திட்டம் உள்ளிட்டவற்றை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் கழகத்தின் மேட்டுப்பாளையம் மாவட்ட தலைவர் வேலுச்சாமி,

மும்மொழி கல்வி திட்டம் மூலமாக இந்தியை திணிப்பதோடு, மாநில கல்வி முறைகளை சீரழிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டினார். மேலும் நீட் தேர்வு காரணமாக இவ்வாண்டு அரசு பள்ளிகளில் பயின்ற ஒரு மாணவர் கூட மருத்துவ கல்லூரியில் நுழைய முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் மேல்நிலை வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் மருத்துவராக முடியாதவாறு வர்ணாசிரம கொள்கையை மத்திய அரசு செயல்படுத்த முயல்வதாகவும் அவர் அப்போது குற்றம்சாட்டினார்.

மேலும் படிக்க