May 7, 2018
தண்டோரா குழு
நீட் தேர்வு எழுத பண்ருட்டியில் இருந்து புதுச்சேரி சென்ற மாணவியின் தந்தை நெஞ்சு வலியால் உயிரிழந்தார்.
மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது.இதில் தமிழக மாணவர்களுக்கு கேரள,ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் நீட் தோ்வு மையம்
ஒத்துக்கப்பட்டிருந்தது.இதனால் தமிழக மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானாகினர்.
இந்நிலையில்,பண்ருட்டியை சேர்ந்த மாணவி சுவாதிக்கு புதுவை தனியார் கல்லூரியில் நீட் தோ்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது.அப்போது,தேர்வு மையத்துக்கு வெளியே காத்திருந்த சுவாதியின் தந்தை சீனிவாசனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சீனிவாசன் இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.