• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை வெளியிட்டது சிபிஎஸ்இ

April 19, 2018 தண்டோரா குழு

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஆடை கட்டுப்பாடுகளை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், மருத்துவநிலை பல்கலை கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனப்படும் நுழைவு தேர்வு கடந்த ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு மே 6 ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடக்க உள்ளது. இதற்கிடையில், கடந்த முறை நீட் தேர்வு நடத்தப்பட்ட போது ஆடைக்கட்டுபாடு என்ற பெயரில் மாணவ, மாணவிகளிடம் நடத்தப்பட்ட சோதனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதனால் இந்த ஆண்டு தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் எந்த மாதிரியான ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்று முன்கூட்டியே வெளியிட்டுள்ளது.

அதன்படி,மாணவர்கள் வெளிர் நிற அரைக்கை ஆடைகளையே உடுத்த வேண்டும்.ஷூ அணியக் கூடாது.பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிய கூடாது.பெரிய பட்டன்கள் வைத்த ஆடைகளை அணியக் கூடாது. பேட்ஜ்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அணிந்து வரக் கூடாது. குறைந்த உயரம் கொண்ட சாதாரண செருப்பு, சாண்டல்ஸ் அணியலாம். தொலைத்தொடர்பு சாதனங்களை தேர்வு மையத்திற்குள் எடுத்து வரக் கூடாது. ஜியோமெட்ரி அல்லது பென்சில் பாக்ஸ், கைப்பைகள், பெல்ட், தொப்பி, நகைகள், வாட்ச் மற்றும் இதர உலோகப் பொருட்கள் ஆகியவற்றையும் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும்,பெண்கள்,வளையல்,தாலி,போன்றவற்றை அணிவதற்கு தடை ஏதும் இல்லை.

மேலும் படிக்க