• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீட் தேர்வு:நெல்லையில் இருந்து கேரளாவுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

May 5, 2018 தண்டோரா குழு

மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு மே 6 ம் தேதி நடைபெறுகிறது.தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ஈரோட்டு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கேரளாவில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு 2 ம் வகுப்பு ரயில் கட்டணம் மற்றும் ரூ.1000 பயணப்படி வழங்கப்படும் என தமிழக அரசு நேற்று அறிவித்தது.
இந்நிலையில்,நெல்லையிலிருந்து நீட் தேர்வு எழுத கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்லும் மாணவர்களுக்கு நெல்லையிலிருந்து இன்று காலை 7.30 மணி முதல் இரவு வரை 8 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த சிறப்பு பேருந்துகளை நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் ராதாபுரம் அதிமுக எம்.எல்.ஏ., இன்பத்துரை ஆகியோர் துவக்கி வைத்தனர்.

மேலும் படிக்க