• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீட் தேர்வில் தோல்வி மற்றொரு தமிழக மாணவி தற்கொலை

June 7, 2018 தண்டோரா குழு

நீட் தேர்வு தோல்வியால் தமிழகத்தில் மற்றொரு மாணவி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவபடிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின.இதில் தமிழகத்தில்,தேர்வெழுதிய 1.2 லட்சம் மாணவர்களில் 45336 மாணவர்கள் மட்டுமே தேர்வில் வெற்றிப் பெற்றுள்ளனர்.

இந்நிலையில்,நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் திருச்சி மாவட்டம் உத்தமர்கோவிலை சேர்ந்த மாணவி சுபஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன் நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் செஞ்சி அருகே உள்ள வெள்ளூந்தூரைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட நிலையில் தமிழகத்தை சேர்ந்த மற்றொரு மாணவியும் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க