• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீட் கேள்விகள் தயாரிக்க நன்கு தமிழ் மொழி பெயர்ப்பாளர்களை தமிழக அரசு அனுப்ப வேண்டும் – பிரகாஷ் ஜவடேகர்

June 22, 2018 தண்டோரா குழு

நீட் கேள்விகள் தயாரிக்க நன்கு தமிழ் மொழி பெயர்ப்பாளர்களை தமிழக அரசு அனுப்ப வேண்டும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

சென்னை ஐஐடி வளாகத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்செய்தியாளர்களிடம் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

அடுத்தாண்டு முதல், அந்தந்த மாவட்டங்களிலேயே நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். ஒரு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அந்த மாவட்டத்திலேயே தேர்வு எழுத அனுமதிக்கப்படும்.மாநில அரசின் பாடத்திட்டத்திலும் நீட் கேள்விகள் கேட்கப்படும் இனி வேறு மாநிலங்களில் தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுதும் நிலை ஏற்படாது. தமிழில் கேள்வி கேட்க, நல்ல மொழி பெயர்ப்பாளர்களை தமிழக அரசு அனுப்பி வைக்க வேண்டும். தேசிய கல்வி கொள்கை விரைவில் வெளியாகும்.திறமையான ஆராய்ச்சி மாணவர்கள் வெளிநாடு செல்வதை தடுக்க இந்தியாவிலேயே ஆய்வு கூட்டமைப்பு அமைக்கப்படும். மாதம் ரூ.1 லட்சம் வரை ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவிநிதி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க