• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீச்சல் குளத்தில் போராடிய பெண்ணை மீட்ட பேஸ்புக் நண்பர்கள்

August 21, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில், நீச்சல் குளத்தில் சுமார் 3 மணிநேரம் சிக்கிய பெண்ணை அவருடைய பேஸ்புக் நண்பர்கள் காப்பாற்றியுள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த 61 வயது மூதாட்டி லெஸ்லி கான், தன்னுடைய வீட்டின் பின்புறத்திலிருந்த நீச்சல் குளத்தில் நீந்துவது வழக்கம். அதேபோல், சில தினங்களுக்கு முன், அவர் அந்த குளத்தில் இறங்கி நீந்தினார். அதிலிருந்து வெளியே வர பயன்படுத்தப்படும் ஏணியில் ஏறிய போது, அந்த ஏணி எதிர்பாராதவிதமாக உடைந்துவிட்டது.

அதனால், அவரால் நீச்சல் குளத்திலிருந்து வெளியே வர முடியவில்லை. சுமார் 3 மணிநேரம், அங்கேயே சிக்கினார்.அங்கிருந்து வெளியே வர போராடியும் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவரை சுற்றி யாருமில்லாததால், அவருடைய நிலை யாருக்கும் தெரியவில்லை.

உடனே, நீச்சல் குளத்தின் கரையிலிருந்த அவருடைய ஐபேட் மூலம், பேஸ்புக் பகுதியில் ‘அவசர உதவி தேவை’ என்று பதிவிட்டார். அவருடைய பதிவைக் கண்ட அவருடைய நண்பர் ஒருவர், காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.

உடனே அவர்கள், அவருடைய வீட்டை அடைந்து, அவரை நீச்சல் குளத்திலிருந்து மீட்டனர். மீட்கப்பட்ட அவர், தனக்கு உரிய நேரத்தில் உதவி வந்தது என்று தனது பேஸ்புக்கிலுள்ள சுமார் 3,981 பேருக்கு தகவல் கொடுத்தார்.

“நீங்கள் வாழ்கையில் போராட்டங்களை சந்திக்கும்போது, மற்றவரிடம் உதவி கேட்கிறீர்கள். அதேபோல், மற்றவர்களுக்கு உதவி செய்ய ஆயத்தமாக இருங்கள்” என்று அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க