• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தது 5 சதவீதம் பணி ! தொழிலாளர் உதவி ஆணையர் வலியுறுத்தல்

April 9, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தது 5 சதவீதம் பணியிடங்களை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, கோவை தொழிலாளர் உதவி ஆணையர்( அமலாக்கம்) ஏ.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:

கோவை மாவட்டத்தில் 20 மற்றும் அதற்கு மேல் பணியாளர்களை பணியமர்த்தி உள்ள அனைத்து நிறுவனங்களிலும்,மாற்றுத்திறனாளிகளுக்கு சமவேலை வாய்ப்பு கொள்கைகளை, மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2015 பிரிவு 21 இன் படி நடைமுறைப்படுத்த வேண்டும். அவர்களுக்கான பணியிடங்களைக் கண்டறிந்து குறைந்தது 5 சதவீதம் பணி வாய்ப்பு வழங்கிட வேண்டும்.

20 நபர்களுக்கு மேல் பணியாளர்களைப் பணியமர்த்தி உள்ள அனைத்து நிறுவனங்களிலும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விவரங்களை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் இணையத்தில் உள்ள கூகுள் சீட் படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். உணவு, கடைகள், நிறுவனங்கள்,கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளில் அதிக மாற்றுத்திறனாளிகளை பணி நியமனம் செய்வதுடன், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, இருக்கை வசதி, வாகன நிறுத்துமிடம் செய்து தர வேண்டும்.

அதிக மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்கும் நிறுவனத்துக்கு, மாவட்ட ஆட்சியர் மூலம் சான்றிதழ் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க