பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ விவகாரத்தில் விசாரணை நிறைவுப்பெற்றது என விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்துள்ளார்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை தவறான வழிக்கு அழைக்கும் ஆடியோ விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி.,மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்த சந்தானம் கமிஷன் சார்பில் தனித்தனியாக விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த சந்தானம்,
ஏப் 19ம் தேதி முதல் நடைபெற்று வந்த விசாரணை இன்றுடன் நிறைவு பெற்றது.ஆடியோ விவகாரம் தொடர்பாக பேராசிரியர்கள்,உதவி பேராசிரியர்கள் என 50க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது.மே 15ம் தேதிக்குள் கவர்னரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனக் கூறியுள்ளார்.
பத்து ஆண்டு காலத்திற்கு தன்னாட்சி உரிமை பெற்ற ஸ்ரீ நாராயண குரு கல்லூரி
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி மாபெரும் விழிப்புணர்வு பேரணி
கோவையில் சூப்பர்ஸ்டார் பிரேஸ்லட் வகைகளை அறிமுகம் செய்தது பி.எம்.ஜெ. ஜூவல்ஸ்
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வெளியீடு
சமூகத்தில் பெண்கள் சிறந்த ஆளுமைகளாக உருவெடுக்க வேண்டும் -உதவி கமிஷனர் அஜய் தங்கம் பேச்சு
சத்குரு தொடர்பான போலி மோசடி ஆன்லைன் பதிவுகளை நீக்க உத்தரவு – டெல்லி உயர் நீதிமன்றம்