• Download mobile app
15 Jan 2026, ThursdayEdition - 3627
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு பாதுகாப்புத் துறை கூடுதல் பொறுப்பு

March 13, 2017 தண்டோரா குழு

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்குக் கூடுதல் பொறுப்பாக பாதுகாப்புத் துறை ஒதுக்கபட்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்து ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் கோவாவில் சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் உதவியுடன் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க உள்ளது.

அந்த மாநிலத்தின் முதல்வராக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தேர்வு செய்யபட்டுள்ளார். செவ்வாயன்று மாலை அவர் கோவா முதல்வராகப் பதவியேற்கவுள்ளார். அதையடுத்து, அவர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்து குடியரசுத் தலைவருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். பாரிக்கரின் ராஜிநாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஏற்றுகொ கொண்டுள்ளார்.

அதனையடுத்து, நிதியமைச்சர் அருண் ஜேட்லி பாதுகாப்புத் துறையை கூடுதலாகக் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மத்திய அமைச்சவரவையில் மாற்றம் செய்யப்பட்டு புதிய அமைச்சர்கள் நியமனம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க