• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாளை முதல் போலியோ சொட்டு மருந்து முகாம்

April 1, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட சுமார் 71 லட்சம் குழந்தைகளுக்கு ஏப்ரல் 2-ம் தேதி முதல் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு தமிழக அரசால் செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தொடர்ந்து போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுமார் 43,051 மையங்களில் முதல்கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஏப்ரல் 2 ம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. ஏப்ரல் 30-ம் தேதி 2-ம் கட்டமாக வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசு பள்ளி, பேருந்து நிலையங்கள்,அங்கன்வாடி மையம், சுகாதார மையங்கள், மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் வழங்கப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க