March 22, 2018
தண்டோரா குழு
இந்திய திரையுலகில் இதுவரை பல விதமான படங்கள் வெளியாகி விட்டன. தமிழ் சினிமாவிலும் விலங்குகளை வைத்தும் நிறைய படங்கள் வெளிவந்துள்ளது.ஆனால் விலங்குகளை மையப்படுத்தி ஹாலிவுட்டில் மட்டுமே படங்கள் உருவாகி இருந்தன.
விலங்குகளை மையப்படுத்தி ஹாலிவுட்டில் மட்டுமே எடுக்கப்பட்ட படங்கள் இந்தியாவில் முதல் முறையாக தமிழில் ஒரு நாயை தனித்துவமாக வைத்து ஒரு படம் உருவாக உள்ளது. இப்படத்தை உறுமீன் படத்தை இயக்கிய சக்திவேல் பெருமாள்சாமி எழுதி இயக்க உள்ளார்.
ஒரு நாய்க்கும் மனிதருக்கும் இடையே இருக்கும் உறவையும் ஒருவருக்கொருவர் உதவி கொள்ளும் விதத்தையும் கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டும் இப்படம் உருவாகவுள்ளது.
காக்டைல் சினிமாஸ் மற்றும் யுனைடட் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ள இப்படத்தின் போஸ்டர் இன்று வெளியானது. இந்த படம் இந்திய திரையுலகில் புதிய மைல் கல்லை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்,இப்படம் குழந்தைகளை கவரும் விதத்தில் ஒரு அட்வென்சர் படமாக இருக்கும் என்றும் கூறுகிறப்படுகிறது.