• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாட்டுக்கோழி பண்ணை மோசடி வழக்கில் 3 பேருக்கு தலா ஒரு நாள் சிறை தண்டனையும், ரூ.4.95 லட்சம் அபராதம்

November 26, 2021 தண்டோரா குழு

கடந்த 2012ல் ஈரோட்டில் செயல்பட்டு வந்த அன்பு பவுல்ட்டரி பார்ம்ஸ் என்ற பெயரில் நாட்டுக்கோழி பண்ணை நிறுவனம் நடத்தி 107 முதலீட்டாளர்களிடம் ரூ.2.25 கோடி மோசடி நிறுவனத்தை நடத்தி வந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சசி, ஆனந்தன், செந்தில்குமார் ஆகிய 3 பேருக்கு தலா ஒரு நாள் சிறை தண்டனையும், ரூ.4.95 லட்சம் அபராதம் மூவரும் சேர்ந்து செலுத்தவும் கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சட்டம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரத்தினசாமி என்பவர் விடுதலை ரூ.1.50 லட்சம் செலுத்தினால், செட் அமைத்து கொடுத்து, 3750 நாட்டுக்கோழி குஞ்சுகள் கொடுத்து, அதற்கு தேவையான மருந்துகள், தீவனங்கள் ஆகியவற்றையும் கொடுத்து, மாதம் மற்றும் ஆண்டுதோறும் 9,000 ரூபாய் ஊக்கத்தொகையாக கொடுப்பதாகவும், மூன்று வருட கால ஒப்பந்தம் என விளம்பரம் செய்து மோசடி செய்துள்ளார்.

முதலீட்டாளர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளில் சிறுக சிறுக பணம் கொடுத்து முழுவதுமாக மோசடி செய்யப்பட்ட தொகை செலுத்தப்பட்டது. அதனால், மோசடி பிரிவிற்கு மட்டும் தண்டனை பெற்ற 3 பேருக்கும் தலா ஒரு நாள் சிறை தண்டனையும், 4 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் அபராதம் 3 பேரும் சேர்ந்து செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க