• Download mobile app
03 May 2025, SaturdayEdition - 3370
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாட்டுக்கோழி பண்ணை மோசடி வழக்கில் 3 பேருக்கு தலா ஒரு நாள் சிறை தண்டனையும், ரூ.4.95 லட்சம் அபராதம்

November 26, 2021 தண்டோரா குழு

கடந்த 2012ல் ஈரோட்டில் செயல்பட்டு வந்த அன்பு பவுல்ட்டரி பார்ம்ஸ் என்ற பெயரில் நாட்டுக்கோழி பண்ணை நிறுவனம் நடத்தி 107 முதலீட்டாளர்களிடம் ரூ.2.25 கோடி மோசடி நிறுவனத்தை நடத்தி வந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சசி, ஆனந்தன், செந்தில்குமார் ஆகிய 3 பேருக்கு தலா ஒரு நாள் சிறை தண்டனையும், ரூ.4.95 லட்சம் அபராதம் மூவரும் சேர்ந்து செலுத்தவும் கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சட்டம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரத்தினசாமி என்பவர் விடுதலை ரூ.1.50 லட்சம் செலுத்தினால், செட் அமைத்து கொடுத்து, 3750 நாட்டுக்கோழி குஞ்சுகள் கொடுத்து, அதற்கு தேவையான மருந்துகள், தீவனங்கள் ஆகியவற்றையும் கொடுத்து, மாதம் மற்றும் ஆண்டுதோறும் 9,000 ரூபாய் ஊக்கத்தொகையாக கொடுப்பதாகவும், மூன்று வருட கால ஒப்பந்தம் என விளம்பரம் செய்து மோசடி செய்துள்ளார்.

முதலீட்டாளர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளில் சிறுக சிறுக பணம் கொடுத்து முழுவதுமாக மோசடி செய்யப்பட்ட தொகை செலுத்தப்பட்டது. அதனால், மோசடி பிரிவிற்கு மட்டும் தண்டனை பெற்ற 3 பேருக்கும் தலா ஒரு நாள் சிறை தண்டனையும், 4 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் அபராதம் 3 பேரும் சேர்ந்து செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க