• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாட்டின் முன்னேற்றத்தில் மேலாண்மை துறை பெரும் பங்கு வகிக்கிறது – கிருஷ்ணராஜ வானவராயர்

August 10, 2019

நமது நாட்டின் பொருளாதார சவால்களில் மேலாண்மை துறை சார்ந்த இளைய தலைமுறையினர் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என பாரதீய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ வானவராயர் தெரிவித்துள்ளார்.

கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள எஸ்.வி.கே.கல்வி குழுமங்களின் FIRE BIRD மேலாண்மை கல்லூரியின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது. எஸ்.வி.கே.கல்வி குழமங்களின் தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இதில் சிறப்பு விருந்தினராக பாரதீய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ வானவராயர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

அப்போது பேசிய அவர்,

நமது நாட்டில் தற்போது வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குறிப்பாக பொருளாதார சவால்களில் மேலாண்மை துறை சார்ந்த இளைய தலைமுறையினர் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். நாட்டின் முன்னேற்றத்தில் மேலாண்மை துறை பெரும் பங்கு வகிக்க போவதாக தெரிவித்தார். விழாவில் கல்லூரி உறுப்பினர்கள் சுந்தர்ராமன்,அழகப்பன்,ஆறுமுகம்,லீலாவதி கந்தசாமி,சுஜானா அபிராமி சுந்தர்ராமன் மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க