• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாடாளுமன்றத்தில் மயங்கி விழுந்த எம்.பி.

January 31, 2017 தண்டோரா குழு

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை தொடங்கியபோது, கேரள மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி. மயங்கி விழுந்தார்.

இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார்.

குடியரசுத் தலைவர் உரையின்போது, நாடாளுமன்ற அவைக்குள் திடீரென, மக்களவை உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூத்த தலைவருமான அகமது மயங்கி விழுந்தார். இச்சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

மயக்கத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள். இவர் கேரள மாநிலம் மலப்புரம் தொகுதியின் மக்களவை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க