• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நம்பிக்கை வாக்கெடுப்பு – திமுக மனு நாளை விசாரணை

September 13, 2017 தண்டோரா குழு

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடக்கோரும் ஸ்டாலின் மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை நடக்கவுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இதுவரை ஆதரவளித்து வந்த டிடிவி.தினகரன் ஆதரவாளர்களான 21 எம்.எல்.ஏ.க்கள் முதல்வருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆகஸ்ட் 22ம் தேதி ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.

திமுக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 119 ஆக உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி அரசு 113 எம்எல்ஏக்களுடன் மைனாரிட்டி அரசாக மாறிவிட்டது ஆகையால் சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தமிழக பொறுப்பு ஆளுநரிடம் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் அளித்தார்.

எனினும், பல முறை மனு அளித்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார். இம்மனு மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ளது.

மேலும் படிக்க