• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்துகள்…! உ.பி. வீடுகள் இடிப்புச் சம்பவம்…! கிளம்பிய போராட்டம்

June 17, 2022 தண்டோரா குழு

நபிகள் நாயகம் குறித்து அவதூறு பரப்பியவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களின் வீடுகளை இடித்த உத்தரபிரதேச அரசை கண்டித்து கோவையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த நுபுர்சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி டெல்லி,உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட்,மேற்குவங்க மாநிலங்களில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களின் வீடுகளை அம்மாநில அரசு இடித்துள்ளது.

இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிய பாஜகவின் நிர்வாகிகளை கைது செய்ய வலியுறுத்தியும்,வீடுகளை இடித்த உ.பி.அரசை கண்டித்து கண்டன கோஷங்களையிட்டு 100க்கும் மேற்பட்டவர்கள் கோவை இரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது மனிதநேய ஜனநாயக கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு நிலவியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க