• Download mobile app
15 Feb 2026, SundayEdition - 3658
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நண்பர்களுடன் மது அருந்தும் போது தகராறு : இளைஞர் கொலை நள்ளிரவில் பதற்றம்

April 18, 2023 தண்டோரா குழு

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரஹ்மத்துல்லா (30).இவர் பெயிண்டர் தொழில் செய்து வருகிறார்.ரஹ்மத்துல்லா கடந்த 10 நாட்களாக செல்வபுரம் பகுதியில் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இதனிடையே நேற்று இரவு பெயிண்டிங் வேலை முடித்துவிட்டு செல்வபுரம் அருகே உள்ள தில்லை நகர் பகுதியில் உள்ள ஒயின்ஷாப்பில் இவர் அவரது 3 நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருக்கும் போது, தகராறு ஏற்பட்டுள்ளது.

பார் உரிமையாளர் இவர்களை வெளியேற்றி உள்ளார்.நான்கு பேரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஒருவரைப் ஒருவர் தாக்கி கொண்டனர்.இதில் இரண்டு பேர் தங்கள் வைத்திருந்த கத்தியால் ரஹ்மத்துல்லாவை குத்தியுள்ளனர்.சம்பவ இடத்தில் ரஹ்மத்துல்லா இறந்துவிட்டார்.

செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க