• Download mobile app
28 May 2025, WednesdayEdition - 3395
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகர் ரஜினிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

January 25, 2020 தண்டோரா குழு

நடிகர் ரஜினிகாந்திற்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் திராவிட கழகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ரஜினிகாந்த் மக்கள் மன்றம் சார்பில் கோவை கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் பத்திரிகையின் ஐம்பதாம் ஆண்டு விழாவில் ராமன் சீதை குறித்து பேசுகையில் பெரியார் குறித்தும் அவர் நடத்திய ஊர்வலம் குறித்தும் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திராவிடர் கழகம் மற்றும் திராவிடர் விடுதலை கழக நிர்வாகிகள் ரஜினிகாந்தின் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக கோவை கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தினர், பெரியார் குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த் உயிரோடு இருக்க மாட்டார் என்று மிரட்டும் தொனியில் பேசியதாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது படப்பிடிப்பு எங்கு நடந்தாலும் தடுத்து நிறுத்துவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாக திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் திராவிட கழகத்தினர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதே போல் ரஜினிகாந்த் அவர்களை பற்றி அவதூறு பரப்பி வரும் ரெட்பிக்ஸ் இணைய தளத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

மேலும் படிக்க