• Download mobile app
20 Dec 2025, SaturdayEdition - 3601
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் மன்சூர் அலிகானுக்கு சேலம் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்

June 27, 2018 தண்டோரா குழு

நடிகர் மன்சூர் அலிகானுக்கு சேலம் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.சேலம் – சென்னை இடையேயான எட்டுவழிச்சாலை திட்டம் குறித்து வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாக நடிகர் மன்சூர் அலிகானை சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் காவல்துறையினர் கடந்த 17ம் தேதி கைது செய்தனர்.

பின்னர் சேலம் அழைத்து வரப்பட்ட அவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இதையடுத்து, நடிகர் மன்சூர் அலிகான் ஜாமீன் கேட்டு ஓமலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.கடந்த 22ம் தேதி இவரது ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது.இந்நிலையில், இன்று நடிகர் மன்சூர் அலிகானுக்கு சேலம் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

மேலும் படிக்க