• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகர் சங்க கட்டடத்திற்கு மார்ச் 31ல் பூமி பூஜை – நாசர்

March 28, 2017 தண்டோரா குழு

நடிகர் சங்க கட்டடத்திற்கு வரும் 31ம் தேதி பூமி பூஜை போட இருப்பதாக நாசர் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் நடைபெற்று ஐஃபா விருது வழங்கும் விழாவில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் சங்க கட்டடத்திற்கு வரும் 31ம் தேதி பூமி பூஜை போட இருக்கிறோம். பூமி பூஜை நடந்த பிறகு ஒன்றரை வருடத்திற்குள் நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடிக்க முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பாகுபலி படம் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, பாகுபலி படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்திலும் அதிக சிரமம் எடுத்து எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்க அடிக்கல் நாட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலகநாயகன் கமல்ஹாசனும் முதல் செங்கலை எடுத்து வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க