December 18, 2019
தண்டோரா குழு
சென்னை திருவான்மியூரில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டில் வனத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நடிகர் அஜீத்தின் உதவியாளர் சுரேஷ் சந்திரா சென்னை மதுரவாயலில் உள்ள தன் வீட்டில் மூன்று அடி நீளமுள்ள மலைப்பாம்பை வளர்ப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அஜித்தின் உதவியாளர் சுரேஷ் சந்திரா வீட்டில் வனத்துறையினர் சோதனை நடத்தினார்கள் ஆனால் அங்கு எதுவும் தென்படவில்லை. பின்பு நடிகர் அஜித்குமாரின் பழைய வீடான திருவான்மியூர் பகுதியில் உள்ள வீட்டிலும் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.
அஜித்குமாரின் உதவியாளர் சுரேஷ் சந்திரன் இந்த சம்பவத்திற்கும் நடிகர் அஜித்குமாருக்கு எந்த சம்பந்தமும் இல்லை என தகவல்கள் தெரிவித்துள்ளார்.இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.