• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நஞ்சுண்டாபுரம் பகுதியில் உருமாறிய கொரொனா பரவுகிறதா? – கோவை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை !

June 10, 2021 தண்டோரா குழு

கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உருமாறிய கொரொனா பாதிப்பால் பலர் இறந்துவிட்டதாக பொய்யான தகவல் பரப்பபடுகின்றது என கோவை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோயம்புத்தூர் மாநகராட்சியில் கொரோனா நோய்கிருமியின் தாக்கம் தற்போது பொது மக்களிடையே பரவிவந்த போதிலும் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் பல்வேறு வழிகளில் கடைபிடிக்கப்பட்டு நோய்த்தொற்று பொதுமக்களை பாதிக்காவண்ணம் அவர்களின் நலன் காக்கப்பட்டு வருகிறது.கோயம்புத்தூர் மாநகராட்சி நஞ்சுண்டாபுரத்தில் அதிகமான அளவில் உருமாறிய கொரோனா பாதிப்பு பொது மக்களிடையே அதிகளவில் பரவியுள்ளதாகவும் அதனால் அவ்விடத்தில் பொதுமக்கள் பொதுமக்கள் பலர் இறந்துள்ளதாக சில விசமிகள் பொய்யான தகவலை பரப்பிவருகின்றனர்.

நஞ்சுண்டாபுரத்தில் நோய்தாக்கத்தை கண்டறிய இதுவரையில் மொத்தம் 650 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.அதில் கடந்த 10 நாட்களில் 56 நபர்களுக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டு அவ்விடத்தில் மாநகராட்சி பணியாளர்கள் வீடுவீடாக சென்று காய்சல், இருமல், சளி, மூச்சுத்திணறல், மயக்கம், அதிக சோர்வு மற்றும் வயிற்றுப்போக்கு இருப்போரை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் உதவிகள் உடனுக்குடன் செய்யப்பட்டு வருகின்றன.எனவே பொதுமக்கள் இதுமாதிரியான பொய்யான வாந்திகளை நம்பவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் இப்பொய்யான தகவல் பரப்பிய விசமிகள் மீது மேல் நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் படிக்க