த.பெ.தி.கவினர் பத்து பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்டதை கண்டித்து அனைத்து கட்சி அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் நடந்த துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் குறித்து உயர்வாகவும் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவு செய்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து பல அமைப்புகள் ரஜினியின் வீடு,துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் தபெதிகவினர் 10 பேர் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக வழக்கு பதிவு செய்யபட்டு கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டனர்.
இந்நிலையில், அவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதை கண்டித்து த.பெ.தி.க, எஸ்.டி.பி.ஐ, வி.சி.கே தமிழ்புலிகள், ஏ.ஐ.சி.சி.டி.யு, சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கம், மே 17 இயக்கம் தமிழர் விடியல் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இந்த ஆர்பாட்டத்தின் போது தமிழக அரசு உடனே இந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் குண்டர் சட்டத்தை ரத்து செய்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி
வி.ஜி.எம். அறக்கட்டளை மற்றும் கரூர் வைஸ்யா வங்கி இணைந்து அதிநவீன இரத்த வங்கியை தொடங்கியுள்ளது
சுந்தரி கிருஷ்ணகுமார் காலமானார்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்
ஸ்கோடா பிராண்ட் இந்தியாவில் நன்கு வலுப்படுத்தி, 2025-ஆம் ஆண்டு ஒரு வளர்ச்சியின் ஆண்டாக உருவாகிவருகிறது
கோவையில் 3 நாட்கள் நடைபெறும் ஆசிய நுண்கலை நகை கண்காட்சி 2025 இன்று துவங்கியது !