• Download mobile app
16 Jun 2025, MondayEdition - 3414
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

த.பெ.தி.கவினர் பத்து பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்டதை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

February 27, 2020

த.பெ.தி.கவினர் பத்து பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்டதை கண்டித்து அனைத்து கட்சி அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் நடந்த துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் குறித்து உயர்வாகவும் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவு செய்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து பல அமைப்புகள் ரஜினியின் வீடு,துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் தபெதிகவினர் 10 பேர் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக வழக்கு பதிவு செய்யபட்டு கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டனர்.

இந்நிலையில், அவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதை கண்டித்து த.பெ.தி.க, எஸ்.டி.பி.ஐ, வி.சி.கே தமிழ்புலிகள், ஏ.ஐ.சி.சி.டி.யு, சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கம், மே 17 இயக்கம் தமிழர் விடியல் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இந்த ஆர்பாட்டத்தின் போது தமிழக அரசு உடனே இந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் குண்டர் சட்டத்தை ரத்து செய்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும் படிக்க