• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொழிலதிபர் வீட்டில் புகுந்து தங்கம், வைரம் திருட்டு

February 16, 2022 தண்டோரா குழு

கோவையில் நள்ளிரவில் வீட்டில் புகுந்து தங்கம், வைரத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை நியூசித்தாபுதூர் பாலசுந்தரம் லே-அவுட்டை சேர்ந்தவர் பாபு(43). சொந்த தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு மாடியில் குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார். கீழ் தளத்தில் உள்ள அறையில் அவரது அம்மா இருந்தார். அவர் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கியதாக தெரிகிறது.

அப்போது நள்ளிரவில் நைசாக உள்ளே புகுந்த மர்ம நபர் 1 பவுன் தங்கம், 10 கிராம் வைரம், ஒரு வாட்ச் மற்றும் ரூ.4 ஆயிரத்தை திருடி கொண்டு சென்றுள்ளார். மறுநாள் காலையில் வீட்டில் திருடு போயிருப்பதை கண்டு பாபு அதிர்ச்சியடைந்தார். அவர் உடனே இது குறித்து காட்டூர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கம், வைர நகைகளை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க