• Download mobile app
09 Feb 2026, MondayEdition - 3652
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொடர்ந்து 12 மணி நேரம் பறையிசைத்து சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பள்ளி மாணவன்

February 27, 2021 தண்டோரா குழு

கோவை காந்திமா நகரை சேர்ந்த கென்னி என்ற பள்ளி மாணவன் தொடர்ந்து 12 மணி நேரம் பறையிசைத்து பீனிக்ஸ் புக் வேர்ல்டு சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

கோவை காந்திமா நகர் பகுதியை சேர்ந்த எல்வின் ,ப்யூலா ஹெப்சிபா தம்பதியரின் மகன் கென்னி தியோபெலஸ். அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும்,அதே பகுதியில் கிராமிய கலைகளை இலவசமாக கற்று தரும் கிராமிய புதல்வன் அகாடமியில் பறை இசைக்க பயிற்சி பெற்றுள்ளார். இவருக்கு பறையிசைக்க கற்று கொடுத்து வந்த கிராமிய புதல்வன் டாக்டர் கலையரசன் இவரது ஆர்வத்தை பார்த்து இவருக்கு உலக சாதனை புரிய ஊக்கம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் தாம் கற்ற பறையிசையில் புதிய சாதனை படைக்க விரும்பிய கென்னி, தொடர்ந்து 12 மணி நேரம் பறையிசைத்து பீனிக்ஸ் புக் ஆப் உலக சாதனை புத்தகத்தில் இவர் இடம் பெற்றுள்ளார். முன்னதாக சாதனை நிகழ்வை பிரபல ஓசோன் யோகா மைய பயிற்சியாளர் பாலகிருஷ்ணன், மற்றும் யோகாவில் பல்வேறு விருதுகள் வாங்கிய நிரஞ்சன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதற்கு முந்தைய சாதனையாக பத்து மணி நேர சாதனையை முறிக்கும் வகையில் இந்த சாதனையை செய்ததாக சாதனை மாணவர் கென்னி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து 12 மணி நேரம் பறையிசைத்து சாதனை செய்த பள்ளி சிறுவனுக்கு பீனிக்ஸ் புக் ஆப் சாதனை புத்தகத்தின் நிறுவனர் டாக்டர் கலையரசன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தனர்.

மேலும் படிக்க