• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேவாரம் பற்றி தவறாக பேசிய சுந்தரவல்லி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

July 31, 2020 தண்டோரா குழு

தேவாரம் பற்றி தவறாக பேசிய சுந்தரவல்லி என்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையரிடம் சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் வேதம் என்பது திருமுறைகள். இந்த திருமுறைகளை நாள்தோறும் இறைவன் முன் ஓதுவாமூர்த்திகள் பாடப்பட்டு வருவது வழக்கம். இப்படி பெருமை கொண்ட தேவாரத்தைப் பற்றியும் திருஞானசம்பந்தர் பற்றியும் சுந்தரவள்ளி என்பவர் யூடியூப் சேனலில் வெளியான ஒரு விவாதத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.அவரது கருத்துக்கள் கடவுள் நம்பிக்கை உள்ள இந்து மக்களின் மனதை புண்படுத்தும் அதோடு மட்டுமின்றி உணர்ச்சிவசப்படும் இறை உணர்வாளர்களை தூண்டிவிட்டு கலவரம் ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்தோடும் பேசி வருவது புரிகிறது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தின் மாவட்ட செய்தி தொடர்பாளர் அருண்குமார்,

சுந்தரவல்லி மீது கடும் நடவடிக்கை எடுத்து சமூக அமைதியை நிலைநாட்டுமாறு கேட்டுக்கொண்டார்.இந்நிகழ்வில் ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில பொதுச்செயலாளர் துரை, மாநகர மாவட்ட செயலாளர் மணி கொங்கு மண்டல தலைவர் பொட்டு ரமேஷ், ஆலய பாதுகாப்பு செயலாளர் இந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க