• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேர்வில் தோல்விடைந்த மகனை ட்ரம்ஸ் அடித்து ஊர்வலமாக அழைத்து சென்ற பெற்றோர்

May 16, 2018 தண்டோரா குழு

மத்திய பிரதேசத்தில்,பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவனை அவரது பெற்றோர்கள் ஊர்வலமாக அழைத்து சென்று கொண்டாடியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுதேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. இதில்,10ம் வகுப்பில் 34% பேரும்,12ம் வகுப்பில் 32% பேரும் தோல்வியடைந்தனர். இதனால் மனமுடைந்த மாணவர்கள் சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்நிலையில் தங்களது மகன் 4 பாடங்களில் தோல்வியடைந்ததை அறிந்த ஒரு மாணவனின் பெற்றோர்கள் அவர் வாழ்வில் துவண்டு விடக்கூடாது என்பதற்காக, தோல்வியையும் கொண்டாடும் வகையில் அதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

அதன்படி, அந்த மாணவனை ட்ரம்ஸ் அடித்து ஊர்வலமாக அழைத்து சென்று,அவருக்கு பூங்கொத்துகளை கொடுத்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.இந்த செயலை பார்த்த அக்கம்பக்கத்தினர் குழப்பமடைந்தனர்.

இது குறித்து அந்த மாணவனின் தந்தை கூறும்போது,

சிறிய வயதில் அவன் சந்திக்கும் இந்த தோல்வி அவனது மன உறுதியை சிதைத்து விடக்கூடாது. இது அவனது கடைசி தேர்வல்ல என்பதை அவனுக்கு உணர்த்துவதற்காகஇவ்வாறு செய்தோம். “வாழ்வின் அனைத்து படிநிலைகளையும் நேர்மறையாக அணுகும் வகையில் கற்று கொள்ள வேண்டும் என்பதை எங்களது மகன் உணர வேண்டும் எனவும் அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க