• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேசியகொடியை அவமதித்த பொள்ளாச்சியை சேர்ந்த இளைஞர் கைது

April 7, 2018 தண்டோரா குழு

இந்திய தேசியகொடியை காலில் மிதித்தபடி புகைப்படம் எடுத்து சமூக வளைதலங்களில் பதிவிட்ட இளைஞரை ஆனைமலை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த மணிகண்டனின் மகன் வெற்றிவேல்(24) இவர் பொள்ளாச்சியில் தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் உறுப்பினராக உள்ளார். காவிரி மேலாண்மை அமைக்க கோரியும் நியூட்ரினோ திட்டம் ஸ்டெர்லைட் ஆலை போன்ற தமிழகத்திற்கு ஆபத்தான திட்டத்தை எதிர்த்து இந்திய தேசிய கொடியை காலில் மிதித்து கடந்த ஞாயிறன்று புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், கொடி அவமதிப்பு தொடர்பாக வெற்றிவேல் மீது ஆனைமலை போலீசார் தேசியக் கொடி அவமதிப்பு வழக்குபதிவு செய்துள்ளனர். இவர் கடந்த சில நாட்களாகவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார் என்பது  குறிப்படத்தக்கது.

மேலும் படிக்க