• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தெற்கு மண்டலத்தில் ரூ.41.80 லட்சம் மதிப்பில் நலத்திட்ட பணிகள் மேயர் துவக்கி வைத்தார்

June 29, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 77வது வார்டுக்குட்பட்ட பகுதியில் ரூ.41.80 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 77வது வார்டுக்குட்பட்ட அய்யாவு பண்ணாடி வீதியில் ரூ.6.80 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறு அமைத்தல் மற்றும் ஆழ்குழாய் கிணற்று நீர் விநியோக குழாய் பதிக்கும் பணி, சொக்கம்புதூர் அருள்கார்டன் பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நகர்நல மையம் கட்டுமானப்பணி ஆகியவற்றை மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து ரங்கசாமி காலனி, பெரியதம்பி நகர், ராஜரத்தினம் நகர் மற்றும் திருவள்ளுவர் நகர் பகுதிகளில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் தூர்வாருதல் பணி மற்றும் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் ஜீவா பாதை மற்றும் அய்யாவு பண்ணாடி வீதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாருதல் மற்றும் சிறுபாலம் அமைத்தல் பணி ஆகியவற்றையும் மேயர் தொடங்கி வைத்து பணி விரைவாகவும், தரமாகவும் செய்து முடித்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா,துணை மேயர் வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, கவுன்சிலர் ராஜலட்சுமி,உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி நகரமைப்பு அலுவலர் சத்யா, மண்டல சுகாதார ஆய்வாளர் ராமு, உதவி பொறியாளர் ஏஞ்சலினா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் படிக்க