• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தெருவிளக்கு கம்பங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் – ரூ.20 ஆயிரம் அபராதம் விதிப்பு

June 18, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் டி.பி. சாலையில் நடைபாதை தளங்களில் தெருவிளக்கு கம்பங்களில் மாநகராட்சி அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அகற்றப்பட்டது.

மேலும் சம்பந்தப்பட்ட 2 விளம்பரம் வைத்த நிறுவனத்திடமிருந்து தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.20 ஆயிரம் அபராதமாக வசூலிக்க மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் அபராத தொகை மாநகராட்சி அதிகாரிகள் மூலம் வசூல் செய்யட்பட்டது. மேலும், கோவை மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சியின் உரிய அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க