• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தெருநாய்கள் கடித்ததில் மேலும் ஒரு சிறுமி பலி

May 14, 2018

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாய்கள் தாக்கியதில் 12 வயது சிறுமி உயிரிழந்தார். கடந்த 6 மாதங்களில் சிதப்பூர் மாவட்டத்தில் 13 பேர் நாய்கள் கடித்து இறந்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் சிதப்பூர் மாவட்டம் மகேச்பூர் சில்வாரா கிராமத்தை சேர்ந்த 12 வயதான ரீனா என்கின்ற சிறுமியை அங்குள்ள 7 தெருநாய்கள் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் அந்த மாவட்டத்தை சேர்ந்த 300 கிராமவாசிகள் அந்த நாய்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை தடை செய்து போராட்டம் நடத்தினர்.

ரீனா வின் தந்தையும் இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்று உறுதியளிக்கும் வரை அவரது இறுதிச் சடங்கைச் செய்ய மாட்டேன் என்று கூறினார்.

அதன் பின் காவல்துறை கண்காணிப்பாளர் ஆனந்த் குல்கர்னி சில நாட்களில் நாய்களின் எண்ணிக்கை குறைப்போம் என்று உறுதியளித்தார்.இதனை அடுத்து கிராமவாசிகள் போராட்த்தை கைவிட்டனர்,

இந்த தெரு நாய்களின் தாக்குதலை கட்டுபடுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் வரை சிதப்பூர் கிராம மக்கள் மத்தியில் குழந்தைகளின் மேல் உள்ள கவலை இருந்து கொண்டுதான் இருக்கும்.

மேலும் படிக்க