• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

February 28, 2017 தண்டோரா குழு

தென் மாவட்டங்களின் கடலோரhd பகுதிகளில், மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் திங்கட்கிழமை கூறியதாவது:

“வடகிழக்கு பருவ மழைக்காலம், ஜனவரி 4-ம் தேதி முடிந்த நிலையில் தமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படுகிறது. இந்நிலையில் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு, வடக்கு கடலோர மாவட்டங்களிலும், தென் மாவட்ட கடலோர பகுதிகளிலும்,லேசான மழை பெய்யலாம்.

சென்னையைப் பொறுத்தவரை, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். குறைந்த பட்சம் 23, அதிகபட்சம், 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்”.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் படிக்க