• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு

May 28, 2018 தண்டோரா குழு

தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் சென்னையில் செய்தியாளர்களை சந்ததித்தார்,

அப்போது,கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாளை தொடங்குவதற்கு சாதகமாக சூழல் நிலவுகிறது, குமரிக்கடல், கேரளா, கர்நாடகா கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
மேலும்,மே 31ஆம் தேதி வரை குமரிக்கடல், லட்சத்தீவு, அந்தமான் பகுதிக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என்றும் அவர் கூறினார்.

மேலும், மார்ச் 1 முதல் இன்று வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 150 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த காலத்தில் பெய்ய வேண்டிய 122 மி.மீட்டர் தான். தற்போது 23 சதவீதம் அதிகம் மழை பொய்வு கண்டுள்ளது. மே 1ம் தேதி முதல் இன்று வரை அதிகப்பட்சமாக திருத்தணியில் 42.6 டிகிரி செல்சியஸ் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. திருச்சி, வேலூர், கரூர் பரமத்தி , மதுரை, சேலம் ,தர்மபுரிஉள்ளிட்ட 7 இடங்களில் 40 டிகிரி செல்சியஸ்சுக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது எனக் கூறினார்.

மேலும் படிக்க