• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

June 6, 2022

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக டெங்கு கொசு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனை அடுத்து கோவை மாநகராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு, வீடாக சென்று குடிநீர் தொட்டி, தண்ணீர் தொட்டி, தண்ணீர் தேங்கக் கூடிய வாய்ப்புள்ள இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருத்துகளை ஊற்றுகின்றனர். அதேபோல் வீட்டில் மற்றும் அருகில் தேவையில்லாத பொருட்களில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் என விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் குடிநீரில் அல்லது தண்ணீர் தேங்கி வைத்துள்ள இடங்களில் கொசு புழுக்கள் வளர்ந்திருத்தால் அந்த கட்டிடத்தின் உரிமையாளருக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க