• Download mobile app
29 Mar 2026, SundayEdition - 3700
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தென்மேற்கு பருவமழை தீவிரம்: நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

July 23, 2021 தண்டோரா குழு

தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.இதனால் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.கனமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் பல இடங்களில் புது அருவிகள் உருவாகியுள்ளன. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் சித்திரைச்சாவடி தடுப்பணை நிரம்பி வழிந்தது. அதே போல் மழை காரணமாக புதுக்குளம், நரசம்பதி, கோளராம்பதி, பேரூர் சொட்டையாண்டி குளம், குனியமுத்தூர் செங்குளம், கங்க நாராயண சமுத்திர குளம் உள்ளிட்ட குளங்களுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் இன்று காலை 8 மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் 535.10 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதன்படி சின்கோனா 102, சின்னக்கல்லார் 115, வால்பாறை 93, சோலையார் 102, ஆழியார் 4.6, பொள்ளாச்சி 11, மேட்டுப்பாளையம் 16, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ,0.5 என்று மொத்தமாக 535.10 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதன் சராசரி 38.2 மில்லி மீட்டராகும்.

மேலும் படிக்க