• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தென்னையில் வெள்ளை பூச்சிகளை அழிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

November 18, 2019

வாயில் பச்சை துணி கட்டி , தென்னையில் வெள்ளை பூச்சிகளை அழிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.

கோவை மாவட்டம் முழுவதும் தென்னை மரங்களில் வெள்ளி பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக உள்ளது. இதனால் தென்னை விவசாயமே முற்றிலும் அழிந்துவிடும் சூழல் உருவாகியுள்ளது. வெள்ளை பூச்சிகளை அழிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தினர், வாயில் பச்சை துணி கட்டி, வெள்ளை பூச்சிகளால் பாதித்த தென்னை மட்டைகளை கொண்டு வந்து , மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகாரளித்தனர்.

தமிழக விவசாயிகள் சங்கத்தலைவர் பழனிச்சாமி பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது,

கோவை மாவடத்தில் வெள்ளை பூச்சிகளால் தென்னை விவசாயமே பல கோடி ரூபாய் மதிப்பில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் தரிசு நில மேம்பாட்டுத்திட்டத்தின் மூலம் கடன் பெற்றவர்கள் வெள்ளை பூச்சி தாக்குதலால் மிகுந்த நஷ்டத்தித்கு உள்ளாகியுள்ளனர். தமிழக அரசின் பூச்சியியல் துறை கொடுத்த மருந்தும், அவர்கள் மஞ்சள் கலர் அட்டையை மரத்தில் கட்டச்சொன்னதும் பலனளிக்காமல், பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமானதுதான் மிச்சம் என்றார். விஞ்ஞான ரீதியிலான கண்டுபிடிப்பை மேற்கொண்டு வெள்ளை பூச்சிகளை அழிக்கும் மருந்தை உருவாக்க தமிழக அரசை வலியுறுத்தினர். வெளிநாட்டிலிருந்து இந்த வெள்ளைப்பூச்சிகள் வந்ததாக அதிகாரிகள் கூறுவதால், மத்திய அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்ததாக தெரிவித்தார்.

மேலும் படிக்க